தயவு செஞ்சு இதை செய்யாதீங்க.., போதை பொருள் கெத்தான விஷயம் இல்ல.., நடிகர் கார்த்திக் அட்வைஸ்!!

0
தயவு செஞ்சு இதை செய்யாதீங்க.., போதை பொருள் கெத்தான விஷயம் இல்ல.., நடிகர் கார்த்திக் அட்வைஸ்!!
தயவு செஞ்சு இதை செய்யாதீங்க.., போதை பொருள் கெத்தான விஷயம் இல்ல.., நடிகர் கார்த்திக் அட்வைஸ்!!

சென்னை பெருநகர காவல் துறை சார்பாக சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று மெரினா பீச்சில் போதை பொருளை பயன்படுத்துவதை தவிர்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மேலும் இந்நிகழ்ச்சியில் SAY NO TO DRUG என மணற் சிற்பம் கல்லூரி மாணவர்களால் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த விழாவில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜீவால், நடிகர் கார்த்தி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஈரோடு மகேஷ், கானா பாலா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அப்போது பேசிய கார்த்திக், தற்போதைய காலகட்டத்தில் போதைப் பொருளை பயன்படுத்துவதை சிலர் பெருமையான விஷயமாக எடுத்து கொள்கின்றனர். இதனால் வருங்கால மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகி விடுவார்களோ என அச்சம் இருக்கிறது. மாணவர்களுக்கு மிக முக்கியமான இரண்டு விஷயம் உடற்பயிற்சி, விளையாட்டு. இதை இரண்டை பின்பற்றினால் பொது மற்றது எல்லாம் தானாக அடங்கிவிடும்.

எதிர்நீச்சல் சீரியல் நடிகையா இது?? ஆத்தாடி.., மாலத்தீவில் படு கிளாமரா போஸ் கொடுத்து இருக்காங்களே!!

இதனால் மாணவர்களுக்கு விளையாட்டை ஊக்கப்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறேன். மேலும் போதை பொருட்கள் நம் சமுதாயத்திற்கு ஒரு பெரிய பின்னடைவை தருகிறது. மாணவர்களுக்கு பெற்றோர்கள் தான் நண்பர்களாகவும் இருக்க வேண்டும். பெற்றோர்கள் தான் பிள்ளைகளை முழு கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்று நடிகர் கார்த்திக் பேசியுள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here