விஜய் டிவி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது தமிழும் சரஸ்வதியும் சீரியல். இதில் அர்ஜுன் தான் நினைத்தது போலவே கோதையின் குடும்பத்தை விட்டு தமிழ் மற்றும் சரஸ்வதியை வெளியேற்றி விட்டார். மேலும் இதற்காக பல சூழ்ச்சி திட்டங்களை தீட்டி வந்த அர்ஜுன் மீது நடேசனுக்கு சந்தேகம் வருகிறது. ஆனால் இதுவரை அர்ஜுன் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்திருந்த கோதைக்கும் தற்போது அவர் மீது சந்தேகம் வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதுபோக தமிழ் மீது நியாயம் இருக்குமோ? நாம் தான் தவறாக புரிந்து கொண்டோமோ? என்ற எண்ணம் கோதைக்கு வருகிறது. இதனால் அர்ஜுனின் செயல்கள் மற்றும் அவரின் நடவடிக்கைகளை கோதை கவனித்து வருகிறார். இப்படி இருக்கையில் அர்ஜுன் செய்த பித்தலாட்ட செயல் வரும் எபிசோடில் கோதைக்கு தெரியவருமாம். இதனால் என் குடும்பத்தில் நடந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம் நீ தானா? என அர்ஜுன் சட்டையை பிடித்து கோதை கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.