உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்த மார்ட்டினா நவரத்திலோவா இரு வகையான புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மார்ட்டினா நவரத்திலோவா:
உலகின் முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையான அமரிக்காவின் மார்ட்டினா நவரத்திலோவா 2 வகையான புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர், மூன்று வடிவிலும் அதிக முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவராக திகழ்கிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது, ஒற்றையர் பிரிவில் 18 முறையும், பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் 31 முறையும் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் 10 முறையும் என 59 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். மேலும், இவர் சர்வதேச அளவில், 200 வாரங்களுக்கு (கிட்டத்தட்ட 4 ஆண்டுகள்) மேல் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்த நட்சத்திர வீராங்கனை ஆவார்.
ரிஷப் பண்ட்-க்காக இந்திய வீரர்கள் செய்ததை பாருங்கள்…, வீடியோவை வெளியிட்ட பிசிசிஐ!!
66 வயதாகும் இவர் பயிற்சியாளராகவும் செயல்பட்டு இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பெருமைகளை உடைய இவருக்கு, தொண்டை மற்றும் மார்பு பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 2 வகை புற்று நோயும் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, மார்ட்டினா நவரத்திலோவா இந்த புற்று நோய் போராட்டத்தில் இருந்து மீண்டு வருவேன் என்று கூறியுள்ளார்.