5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

0

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகஅடுத்த 24 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வெயில் தாக்கத்தால் அவதிப்படும் மக்களுக்கு இது ஆறுதலாக இருக்கும்.

எந்தெந்த மாவட்டங்கள்..?

தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் அதிகபட்சமாக 106 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்துகிறது. இதனால் வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை அல்லது ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது.

தென் தமிழகம், மலைப் பகுதியை ஒட்டி உள்ள மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here