தமிழகத்தில் மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை மூன்றாவது மாதமாக தொடர்ந்து குறைக்கப்பட்டு உள்ளது. சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டு உள்ளதால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
என்ன காரணம்..?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஆகியவற்றின் அடிப்படையில் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தால் கச்சா எண்ணையின் விலை பெரிதளவு சரிந்து உள்ளதால் எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை குறைப்பில் ஈடுபட்டு உள்ளன.
எவ்வளவு குறைவு?
தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 கேஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்து தான் வாங்க வேண்டும். தற்போது இந்த மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை 192 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் ரூ.761.50 க்கு விற்பனை செய்யப்பட்ட கேஸ் சிலிண்டர் ரூ.569.50 விற்பனை செய்யப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |