தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வரும் நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (நவம்பர் 21) கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் தேனி ஆகிய தென்மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ரெயின் அலர்ட் அறிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், திருப்பூர், கோவை, நீலகிரி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தி உள்ளனர்.
இல்லத்தரசிகளே.., உரிமை தொகை வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்.., இனி கிடைக்காதா?? லீக்கான அப்டேட்!!!