கோலிவுட் திரையில் முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டிருக்கிறார் கார்த்தி. அண்மையில் இவர் நடித்த ஜப்பான் திரைப்படம் திரையில் வெளியாகி இருந்தது. மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் இயக்குனர் அமீருக்கு அழைப்பு விடுக்கவில்லை. இது குறித்து அமீரிடம் கேட்டதற்கு கார்த்தி குடும்பத்துடன் எனக்கு இருந்த நட்புறவை கெடுத்தது பருத்திவீரன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் என கூறியிருந்தார்.
Enewz Tamil WhatsApp Channel
இதையடுத்து ஞானவேல் ராஜா அமீரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில விஷயங்களை உடைத்து பேசியுள்ளார். அதாவது பருத்திவீரன் படத்தை 2 கோடியில் இயக்கி தருவதாக சொல்லி 4 கோடி வரை செலவிழுத்து விட்டார். இப்படி என்னை போல பல தயாரிப்பாளர்கள் அமீரால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மேலும் என்னை பற்றி அமீர் பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன். அவரை பற்றி இன்னும் பல விஷயங்களை சொல்ல நேரிடும் என எச்சரிக்கை செய்துள்ளார்.