தமிழகத்தில் விசேஷ தினங்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்., எந்தெந்த ஏரியானு தெரியுமா?

0
தமிழகத்தில் விசேஷ தினங்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்., எந்தெந்த ஏரியானு தெரியுமா?
தமிழகத்தில் விசேஷ தினங்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்., எந்தெந்த ஏரியானு தெரியுமா?

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பண்டிகை, தொடர் விடுமுறை ஆகிய தினங்களில் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். அந்த வகையில் நாளை (02.09.2023) மற்றும் நாளை மறுநாள் விடுமுறை, முகூர்த்தம், வேளாங்கண்ணி திருவிழா என ஏராளமானோர் பேருந்து பயணம் செய்ய உள்ளனர். இவர்களின் எளிய பயணங்களுக்காக சென்னையில் இருந்து ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கும், மறுமார்க்கமாக சென்னைக்கு வரவும் என 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதேபோல் திருச்சியிலிருந்து மதுரை, தஞ்சாவூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட ஊர்களுக்கும், மறுமார்க்கமாக திருச்சிக்கு வர 100 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 250 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் திங்கள்கிழமை (04.09.2023) வரையிலும் இயக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளனர். முன்பதிவு டிக்கெட்டுகளை பொறுத்து சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அரசு ஊழியர்களே ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி இம்மாதம் உயர்வது உறுதி?? வெளியான மாஸ் அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here