தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசு நாளை கூடி ஆலோசிக்க உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்குமாறு தமிழக அரசால் அமைக்கப்பட்ட மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் இதுவரை 834 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாளுக்குநாள் இதன் தீவிரமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தமிழகத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசு மருத்துவக் குழு ஒன்றை நியமித்து இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என மருத்துவக்குழு பரிந்துரை செய்து உள்ளது.
தமிழகத்தில் நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே திட்டமிட்டபடி பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் நாளை அனைத்து மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |