தற்போது கொரோனா நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் இதற்கான தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்க படவில்லை. இந்நிலையில் மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தி வருகிறது.
ரெட் அலர்ட்
தமிழகத்தில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்த நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அரசும் இந்த நோய் குறித்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மேலும் இதன் தொடர்ச்சியாக கொரோனா பாதித்த இடங்களை சிவப்பு, மஞ்சள், பச்சை என தனி மண்டலங்களாக மத்திய அரசு பிரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சிவப்பு மண்டலத்தில் உள்ள நகரங்களுக்கு போக்குவரத்து அனுமதி இல்லை. மேலும் சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை, செகந்திராபாத் உள்ளிட்ட நகரங்கள் சிவப்பு மண்டலத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |