கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகமே முடங்கிப்போய் உள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் ஊரடங்கு உத்தரவால் படிப்பு அல்லது வேலைக்கு சென்று சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கித்தவிக்கும் தமிழர்களை அழைத்து வருவதற்கு தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
சிறப்பு இணையதளம்:
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில், கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்தை சேர்ந்த பல மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் நம் நாட்டிற்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களில், உடனடியாக தமிழகத்திற்கு திரும்ப விரும்புகிறவர்களின் நலனுக்காகவும், அவர்களின் குடும்பத்தினரின் நலனை காத்திடும் நோக்கிலும், அவர்களது எண்ணிக்கையினை அறியும் வகையிலும், தமிழகத்திற்கு திரும்புகிறவர்களுக்கு தனிமைப்படுத்துதல் வசதிகள் ஏற்படுத்திடவும், அவர்களை பற்றிய தகவல்களை பெறுவதற்காக இணைய பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. nonresidenttamil.org என்ற இந்த சிறப்பு இணையதளத்தில் அவர்கள் பதிவு செய்து கொண்டால் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது .
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |