இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மே 3க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி பரவலாக உள்ளது. தற்போது பிறகு கொரோனா பாதிப்பு இல்லாத நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மே 3க்கு ஊரடங்கு தளர்த்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.
ஊரடங்கு உத்தரவு:
இந்தியாவில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிய இருந்த உத்தரவு மாநிலங்களின் கோரிக்கையால் மீண்டும் 2 வாரங்களுக்கு அதாவது மே 3 வரை நீட்டித்து பிரதமர் மோடி அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் நாட்டில் கொரோனா தாக்கம் இன்னும் குறையவில்லை. பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க சில மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
புதிய நெறிமுறைகள்:
இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனாவின் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அத்தகைய பாதிப்பு இல்லாத மாநிலங்களில் மே 3ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மே 4ம் தேதி முதல் கடைபிடிக்க வேண்டிய புதிய நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |