அமெரிக்காவில் கொரோனவை குணப்படுத்தும் மருந்து தயார்..! காப்புரிமை கோரும் சீனா..!

0

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் வாட்டிவதைத்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் செத்து மடிந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்து குறித்த தீவிரசோதனையில் ஈடுபட்டு இருந்த இந்திய – அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானிகள் மூன்றாவது ஆய்வில் ரெடிம்சிவிர் மருந்து கொரோனவை கட்டுப்படுத்தும் என கண்டுபிடித்து உள்ளனர்.

அமெரிக்க நிறுவனம்:

கொரோனா தடுப்பு மருந்து சோதனை குறித்து தெரிவித்த அமெரிக்காவின் கிளியட் நிறுவனம், ரெடிம்சிவிர் மருந்து கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்களுக்கு முதல் 5 நாட்கள் கொடுக்கப்பட்டதாகவும், இது மிகுந்த பலன் அளித்ததாகவும் தெரிவித்து உள்ளது. மேலும் இந்த மருந்தால் பாதி நோயாளிகள் இரண்டே வாரங்களில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக கூறியுள்ளது.

இதன் மூன்றாவது மற்றும் கடைசி சோதனையிலும் நல்ல பலன் அளித்துள்ளதால் இந்த மருந்திற்கு அனுமதி பெற இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக தெரிவித்து உள்ளது. இது குறித்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இது சாதகமான ஒரு நல்ல செய்தி என கூறினார்.

இந்திய வம்சாவளி விஞ்ஞானி:

ரெடிம்சிவிர் மருந்து குறித்து ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் பணிபுரியும் அருணா சுப்ரமணியன், இந்த மருந்தை 10 நாட்கள் எடுத்துக் கொண்டவருக்கும், 5 நாட்கள் எடுத்துக் கொண்டவருக்கு ஒரே மாதிரியான பலன் கிடைப்பதாக தெரிவித்து உள்ளார். இதனால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது என தெரிந்தால் மிக நல்ல செய்தியாக இருக்கும் என கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகை:

வெள்ளை மாளிகையின் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பிரிவில் இருக்கும் டாக்டர் ஆன்டனி பாசி, கொரோனா பாதித்தவர்களை குணப்படுத்துவதில் ரெடிம்சிவிர் மருந்து நல்ல பலன் அளிப்பதாகவும், அதனால் இறப்பு விகிதம் குறைந்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் இந்த ஆராய்ச்சியில் அமெரிக்கா உடன் இணைந்து சீன நிறுவனமும் ஈடுபட்டு உள்ளதால், சீனா அதற்கு காப்புரிமை கோரி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here