தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்க்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது தமிழக சுகாதாரத்துறை இயக்குநராக அஜய் யாதவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா முதன்முதலில் மார்ச் 7 கண்டறிய பட்டது. அதனை தொடர்ந்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.
ஆனால் அது நாளுக்கு நாலு அதிகரித்துக்கொண்டே போனது. மேலும் மார்ச் 23 இல் முதன் முதலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது 5 ஆம் கட்டமாக ஜூன் 31 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதில் பல தளர்வுகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இடமாற்றம்
இந்நிலையில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக சுகாதாரத்துறை திட்ட இயக்குநராக அஜய் யாதவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே அந்தப் பொறுப்பில் இருந்த நாகராஜன் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன இயக்குநராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நில சீர்திருத்தத்துறை அதிகாரியாக சந்திரசேகர் சகாமுரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |