தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே வேளையில் வேலைவாய்ப்பற்றவர்கள், புதிய தொழில் முனைவோர்களாக மாற்றவும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், அண்ணல் அம்பேத்கர் முன்னோடி திட்டத்தின் கீழ் ரூ.2,134 கோடி வங்கி கடன் உதவிகள் 28,102 பேருக்கு வழங்கி உள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதற்கு மானியமாக அரசு சார்பில் ரூ.770 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதேபோல் மாற்றுத்திறனாளிகள், மகளிர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் ஆகியோர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாக கூறியுள்ளனர்.
சென்னையில் நேற்று இரவு திடீரென பெய்த கனமழை.., முடங்கிய சேவை.., பயணிகள் கடும் அவதி!!!