தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் நேற்று திடீரென இரவு முழுவதும் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் முக்கிய இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இது மட்டுமல்லாமல் திடீரென பெய்த கனமழையால் சென்னையில் விமான சேவைகள் நேற்று பெரிதும் பாதித்தது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் ஆறு சர்வதேச விமானங்கள் உட்பட 16 விமானங்களின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் நடுராத்திரியில் பயணிகள் செய்வதறியாமல் மிகவும் அவஸ்தை பட்டனர். அதன் பின் மழை நின்றதும் விமான சேவை வழக்கம் போல் இயங்கியது.
தனது மரணத்தை அன்றே கணித்த “எதிர் நீச்சல்” மாரிமுத்து.., ஷாக்கில் ரசிகர்கள்.., வைரலாகும் வீடியோ!!