தமிழகத்தில் ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 8 பேர் உயிரிழப்பு..!

0

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8700ஐ தாண்டி உள்ளது. இன்று 8பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா:

  • தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 8,718
  • இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 61
  • இதுவரை சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை – 2,66,687

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 83 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ள காரணத்தினால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2134 ஆக அதிகரித்து உள்ளது. தற்போது 6520 பேர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 510 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 5,848 ஆண்கள், 2,867 பெண்கள் மற்றும் 3 திருநங்கைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு விபரம்:

  • சென்னை – 4,882 பேர்
  • கோவை – 146 பேர்
  • திருப்பூர் – 114 பேர்
  • திண்டுக்கல் – 111 பேர்
  • ஈரோடு – 70 பேர்
  • நெல்லை – 90 பேர்
  • செங்கல்பட்டு – 916 பேர்
  • நாமக்கல் – 77 பேர்
  • திருச்சி – 65 பேர்
  • திருவள்ளூர் – 467 பேர்
  • மதுரை – 121 பேர்
  • தேனி – 66 பேர்
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here