தமிழகத்தில் ஒரே நாளில் 1,685 பேருக்கு கொரோனா உறுதி – 21 பேர் பலியான சோகம்..!

0
corona virus in chennai
corona virus in chennai

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,685 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. பலி எண்ணிக்கையும் புது உயரத்திற்கு சென்றுள்ளது. ஒரே நாளில் 21 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

கொரோனா தாக்கம்:

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 34,914 ஆகவும், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 307 ஆகவும் உள்ளது. ஒரே நாளில் 798 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் 18,325 எண்ணிக்கை ஆக அதிகரித்து உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

1500 ஜிபி வழங்கும் பிஎஸ்என்எல் புதிய சலுகை திட்டம்..!

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 1,243 பேருக்கும், செங்கல்பட்டில் 158 பேருக்கும், திருவள்ளூரில் 90 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 32 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 36 பேருக்கு காரோண உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 10வது நாளாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

டாப் 3 கொரோனா பாதித்த மாவட்டங்கள்:

  • சென்னை – 24,545 பேர்
  • செங்கல்பட்டு – 2,146 பேர்
  • திருவள்ளூர் – 1,476 பேர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here