இந்த வருடத்தின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட பி.எஸ்.என்.எல் யின் 1500ஜிபி எஃப்.டி.டி.எச் திட்டத்தை அந்நிறுவனம் சென்னை மற்றும் தெலுங்கானா வட்டங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தி இருந்த நிலையில் தற்போது இந்த சேவையை தமிழ்நாட்டின் நகரங்களிலும் தற்போது விரிவுபடுத்தி உள்ளது.
1500ஜிபி எஃப்.டி.டி.எச் திட்டம்:
ஜியோ நிறுவனம் பரப்பரப்பாக சில சலுகைக்குகளை அறிவித்த போது பி.எஸ்.என்.எல் நிறுவனமும் அறிவித்து வந்தது. வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் நிறைய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுக படுத்தி வந்தது. அந்த திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த நிறுவனம் 1500ஜிபி எஃப்.டி.டி.எச் திட்டத்தை தெலுங்கானா மற்றும் சென்னை வட்டங்களில் மட்டுமே அறிவித்து இருந்தது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
தமிழ்நாட்டிலும் விரிவாக்கம்:
இந்நிலையில் இந்த திட்டத்தை பி.எஸ்.என்.எல் நிறுவனம் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் செயல் படுத்த திட்டமிட்டு உள்ளது. இந்த அறிவிப்பு ஆனது எஸ்என்எல் நிறுவனத்தின் ஜூனியர் டெலிகாம் அதிகாரி ஒருவர் ட்வீட்டில் உள்ளார். அந்த ட்வீட்டில் கூறப்பட்டது என்னவென்றால்”அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனம் ரூ.1,999 மதிப்புள்ள அதன் 1500 ஜிபி திட்டத்தை சேலம், ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், வாழப்பாடி, ராசிபுரம், நாமக்கல், வேலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட நகரங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.