தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீது ‘மனித வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்துவேன்’ என குறிப்பிடப்பட்ட கொலை மிரட்டல் கடிதம் முதலமைச்சர் அலுவலகத்திற்கு வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் இன்று முதல் தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ள நிலையில், இத்தகைய மிரட்டல் கடிதம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
கொலை மிரட்டல் கடிதம்:
தமிழகத்தில் திரையுலக பிரபலங்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது அடிக்கடி நடைபெற்று வருகிறது. காவல்துறை கட்டுப்பாட்டு எண்ணிற்கு தொடர்பு கொள்ளும் மர்ம நபர் குறிப்பிட்ட நடிகர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்து விடுகிறார். போலீசாரும் மோப்ப நாய்கள் உதவியுடன் சென்று சோதனையிட்டு அது ‘டம்மி கால்’ என உறுதி செய்வது வழக்கமாகி விட்டது. இந்த சம்பவங்களுக்கு பெரும்பாலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தான் காரணமாக உள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது அதையெல்லாம் மீறி, தமிழக முதல்வருக்கே கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை KK நகர், 10வது செக்டர் என்ற முகவரியில் இருந்து பிரவீன் குமார் என்ற பெயரில் முதல்வர் அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துளளது. அதில் ‘மனித வெடிகுண்டாக மாறி தமிழக முதல்வர் மீது தாக்குதல் நடத்துவேன்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அதில் இருந்த தொலைபேசி எண்ணிற்கு கால் செய்துள்ளனர்.
மாவீரன் நெப்போலியன் புற்றுநோயால் தான் இறந்தார்!!
அப்போது மறுமுனையில் காலை எடுத்த அந்த மர்ம நபர், ‘பிரவீன் குமார்’ என பெயரை மட்டும் கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் செல்போன் சிக்னலை வைத்து தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர். தமிழக முதல்வர் சட்டமன்ற தேர்தலுக்காக இன்று எடப்பாடி தொகுதியில் இருந்து பரப்புரையை தொடங்க உள்ள நிலையில், இந்த மிரட்டல் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் உளவுத்துறையினர் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர்.