இறப்பு என்னை தழுவும் வரை அரசியலில் ஈடுபட மாட்டேன் – தமிழருவி மணியன் அதிரடி பேட்டி!!

0

தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அரசியல் கட்சி தொடங்கப்போவது இல்லை என்னும் பரபரப்பு அறிக்கை நேற்று வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது தமிழருவி மணியன், இறப்பு என்னை தழுவும் வரை அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று அதிரடியாக பேட்டி அளித்துள்ளார்.

ரஜினி அரசியல்:

கடந்த 2017ம் ஆண்டு ரஜினி அரசியலில் களமிறங்கப் போவதாக அறிவித்தார். மேலும் அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வந்தார். தற்போது அடுத்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. எனவே அந்த தேர்தலில் ரஜினி போட்டியிட போவதாகவும் மேலும் வரும் டிசம்பர் 31ல் தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னம் அறிவிக்கப்போவதாக தகவல் வெளியானது. மேலும் அவருக்கு சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட ரத்த அழுத்த கோளாறு காரணமாக அவர் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது சிகிச்சைக்கு பின் சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். மேலும் ரஜினி நேற்று யாரும் எதிர்பாராத வகையில் தனது உடல்நிலையை முன்னிறுத்தி தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக இல்லை என்று அறிவித்தார். இந்த தகவல் அவரது அனைவரையும் அதிர்ச்சி அடையச்செய்தது.

தமிழருவி மணியன் பேட்டி:

தற்போது ரஜினியை தொடர்ந்து தமிழருவி மணியன் அதிரடியாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன், மாணிகத்திற்கும் கூழாங்கற்களுக்கும் வேறுபாடு தெரியாத இந்த அரசியல் களத்தில் நான் வந்து என செய்வது, தமிழக மண்ணில் மீண்டும் காமராஜர் ஆட்சி வரவேண்டும் என்று விரும்பியது என் தவறு, அரசியலில் என் நேர்மை மற்றும் உழைப்பிற்கு பலனில்லை எனவே நான் தள்ளி நிற்பது தான் சிறந்தது, திமுகவில் இருந்து விலகிய கண்ணதாசன் நான் போய்வருகிறேன் என்று கூறினார், ஆனால் தற்போது நான் கூறுவது, நான் போகிறேன் திரும்ப வரமாட்டேன்” என்று அறிவித்துள்ளார். ரஜினி அரசியலில் இனி வரமாட்டேன் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது தமிழருவி மணியனும் தனது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here