சையத் முஷ்டாக் அலி டிராபியில் எதிரணியை தனது சுழலால் அச்சுறுத்தி வரும் தமிழக வீரர் விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வீரர்:
இந்தியாவில் நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி டிராபியில், குரூப் “இ” யில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அணி ஜார்கண்ட் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தமிழ்நாடு அணி, 20 ஓவர் முடிவில் 138 ரன்களை எடுத்திருந்தனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
எளிதில் எட்ட கூடிய இலக்கை துரத்திய ஜார்கண்ட் அணியின், முன் வரிசை வீரர்கள் இஷான் கிஷான் (24), பங்கஜ் குமார் (33) என நல்ல ஒரு அடித்தளம் கொடுத்து வெளியேறினர். இவரைத் தொடர்ந்து வந்த, கேப்டன் விராட் சிங் அதிரடி காட்டி அரைசதம் (52) கடந்தார். ஆனால், மறுபுறம் பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் தமிழ்நாட்டின் சாய் கிஷோர் சுழலில் சிக்கி தவித்தார்,
நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி இன்று பலப்பரீட்சை.,ரோஹித் பிளான் என்ன? இது தான் பிளேயிங் லெவன்??
இதனால், ஜார்கண்ட் நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் 128 ரன்கள் மட்டுமே எடுத்து, 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதில், சாய் கிஷோர் 4 ஓவர்களை வீசி 6 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். இவர் இதே போல, சிக்கிம் அணிக்கு எதிராகவும் 4 ஓவரில் 7 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விரைவாக சர்வதேச இந்திய அணியில் கால் பதிப்பார் என எதிர்பாக்கப்படுகிறது.