சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருவதால், குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. அதன் பின்னர் இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பினாலும் மஞ்சள் காமாலை, எலி காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர் சவுந்தரராஜன் எச்சரித்துள்ளார். குறிப்பாக தெருக்களில் நீர் வடிந்த பிறகும் கூட மண்ணில் இருந்து மீலியாய்டோகிஸ் என்ற புதிய வகை பாக்டீரியா தொற்று உருவாக வாய்ப்புள்ளது.
தமிழக மின் நுகர்வோருக்கு நற்செய்தி,, 2024 ஜனவரி முதல் இந்த பிரச்சனை இருக்காது? மின்வாரியம் தகவல்!!!
எனவே மழைக் காலங்களில் பொதுமக்கள் தண்ணீரை கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிக்க வேண்டும். வெறும் காலுடன் அழுக்கடைந்த தண்ணீரில் நடப்பதை தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.