தமிழக மின் நுகர்வோருக்கு நற்செய்தி,, 2024 ஜனவரி முதல் இந்த பிரச்சனை இருக்காது? மின்வாரியம் தகவல்!!!

0
தமிழக மின் வாரியம் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே தமிழ்நாட்டில் எண்ணூர், நெய்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல இடங்களில் அனல் நிலையங்கள் உள்ளன. தற்போது இதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டியில் புதிய அனல் மின் நிலையம் திறக்கப்பட உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது இந்த மின் நிலையம் 6500 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 800 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். தற்போது அனல் மின் நிலையத்தின் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் ஜனவரி மாதம் திறக்கப்பட உள்ளது. அதன் பின் உடனடியாக பணிகள் துவங்க உள்ளது. தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய அனல் மின் நிலையம் இதுதான். மேலும் அனல் மின் நிலையத்திற்கு ஒடிசா மற்றும் தெலுங்கானா மாநிலத்தின் சுரங்கங்களில் இருந்து நிலக்கரி பெற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதன் மூலம் அடுத்த ஆண்டு மின் தட்டுப்பாடு பிரச்சனை இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here