தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை…, “இனிமே இப்படித்தான்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

0
டிசம்பர் மாத தொடக்கம் முதல் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை ஆனது வெளுத்து வாங்கி வருகிறது. இதன் உச்ச கட்டமாக டிசம்பர் 4 ஆம் தேதி மிக்ஜாம் புயல் தமிழகத்தின் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த பாதிப்பில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சித்து வரும் இந்நிலையில், தமிழகத்தின் தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.
அதாவது, தமிழகத்தின் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், அடுத்த 2 நாட்களுக்கும் கனமழை தொடரும் என வானிலை  ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். இனி வரும் காலங்களில் இது போன்ற கனமழையை அடிக்கடி எதிர்பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here