வெள்ளத்தில் நடந்த வளைகாப்பு விழா.., கடமை கண்ணியம் கட்டுப்பாட்டோட வேலை பார்த்த போட்டோகிராபர் – வீடியோ வைரல்!!

0
வெள்ளத்தில் நடந்த வளைகாப்பு விழா.., கடமை கண்ணியம் கட்டுப்பாட்டோட வேலை பார்த்த போட்டோகிராபர் - வீடியோ வைரல்!!
மிக் ஜாம் புயல் காரணமாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம் ரோஸ் மஹால் திருமண மண்டபத்தில் வளைகாப்பு விழா நடைபெற்றது. அந்த சமயத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மஹால் உள்ளே தண்ணீர் புகுந்தது. ஆனால் மணமகன் மணமகள் உள்ளிட்ட உறவினர்களுக்கும் எந்தவித பதட்டமும் இன்றி விழாவை கொண்டாடினர்.
மேலும் அங்கே போட்டோ எடுக்க வந்தவர்கள் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாமல் வெள்ளத்திலே வைத்து மணமகன் மற்றும் மணமகளை வைத்து போட்டோ  எடுத்துள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வாரம் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சமயத்தில் ஒரு பெண் மெஹந்தி போட சென்ற வீடியோ வைரலாகிய நிலையில், தற்போது வெள்ளத்தில் வளைகாப்பு நடந்த வீடியோ தீவிரமாக வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here