இந்தியன் சூப்பர் லீக் தொடர், 12 அணிகளுக்கு இடையே கொல்கத்தா, மும்பை, கேரளா உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த வகையில், நேற்று ( டிசம்பர் 17) ஒடிசாவில் நடைபெற்ற போட்டியில், ஹைதராபாத் அணிக்கு எதிராக ஒடிசா அணி மோதியது. இதில், சொந்த மண்ணில் விளையாடிய ஒடிசா அணி ஆரம்ப முதலே அதிரடி காட்டியது.
அதன்படி போட்டியின் 36வது நிமிடத்தில் ராய் கிருஷ்ணா ஒடிசா சார்பில் சார்பாக கோல் ஒன்றை அடித்து அசத்தினார். இவரை தொடர்ந்து, அதே அணியின், மௌர்டாடா 40வது நிமிடத்தில் கோலை நுழைத்தார். இதன் மூலம், ஆட்டத்தின் முதல் பாதியில், ஒடிசா அணி 2-0 என முன்னிலை பெற்று இருந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில், ஒடிசா வீரர் ராய் கிருஷ்ணா ஒரு கோல் அடிக்க, 3-0 என்ற கணக்கில் ஹைதராபாத் அணியை ஒடிசா அணி வீழ்த்தியது.
Enewz Tamil WhatsApp Channel
ஓய்வூதியதாரர்களே., உயர் ஓய்வூதியம் இப்படி கணக்கீடு செய்யப்படும்? EPFO வெளியிட்ட அறிவிப்பு!!!