மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் பெருமளவு சேதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில், கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு தாழ்வான பகுதிகளிலும் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு கன்னியாகுமரி. தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த விலக்கு அறிவித்துள்ளனர். அதாவது இன்றும் (டிச.18), நாளையும் (டிச. 19) செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை டிசம்பர் 20ஆம் தேதி தாமதக் கட்டணமின்றி செலுத்தலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக மக்களே அலர்ட்., வெள்ள பாதிப்பால் உருவாகும் புதிய வகை நோய்., மருத்துவர் வெளியிட்ட அறிவிப்பு!!!