தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.., அறிவிப்பு வெளியீடு!!!

0
தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை கடந்த சில தினங்களாக வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்க்கிறது. இந்த கனமழை காரணமாக இன்று 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும்  தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது தவிர நேற்று பெய்த கனமழையால் அந்த மாவட்டம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, கடைகள் மூடப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் நாளை அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here