கொரோனா தொற்று நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் சில பிரபலங்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த வகையில் பிரபல நடிகை தமன்னாவிற்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சை முடிவில் குணமடைந்த தமன்னா தற்போது வீடு திரும்பி உள்ளார்.
தமன்னா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. கேடி படத்தில் வில்லியாக நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும் பல விளம்பரங்களிலும் நடித்திருந்தார். அதன் பிறகு ‘கண்டேன் காதலில்’ படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் தமன்னா நடித்து வருகிறார்.
மேலும் வீரம் படத்தில் அஜித் உடன் நடித்திருந்தார். இந்த படம் தமன்னாவிற்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தந்தது. தமன்னாவிற்கு தமிழ்நாட்டில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. லாக் டவுன் சமயத்தில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்த தமன்னா தொடர்ந்து வீடீயோக்களை வெளியிட்டு வந்தார்.
ஹைதராபாத்தில் படப்பிடிப்புக்காக சென்றிருந்த தமன்னாவிற்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும் அவரின் பெற்றோருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமன்னாவிற்கு கொரோனா உறுதியானதை கேள்விப்பட்ட அவரின் ரசிகர்கள் இதனால் பெரும் அதிர்ச்சியடைந்தனர். தற்போது முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் தமன்னா. மேலும் ஒய்வு நாட்களை மும்பையில் தனது வீட்டில் கழித்து வரும் தமன்னா உடற்பயிற்சி செய்ய தொடங்கியுள்ளார்.
அந்த உடற்பயிற்சி வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார் தமன்னா. கொரோனாவில் இருந்து மீண்டு வந்ததும் உடற்பயிற்சி மிகவும் முக்கியமானதாக இருப்பதாக கூறியுள்ளார். கொரோனா தன்னை மேலும் வலிமையாக மாற்றியதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.