தற்போது திரையுலகை சேர்ந்தவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மேலும் இதனால் பல உயிரிழப்புகளும் நேர்ந்து வருகிறது. நேற்று தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக வெளியான உறுதிப்படுத்தப்படாத தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமன்னா
தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் தமன்னா. இப்படத்தில் இவர் வில்லியாக நடித்திருப்பார். தனது முதல் படத்திலேயே தனது அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருப்பார்.
மேலும் அதன் பிறகு ராஜ் மஹால் விளப்பரத்திலும் நடித்திருப்பார். மாடலிங் துறையில் இருந்த தமன்னாவிற்கு அப்போது பட வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்கவில்லை. ஆனந்த தாண்டவம் என்ற படத்திலும் நடித்திருப்பார்.
அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு 2019 இல் வெளியான கண்டேன் காதலை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் நடிகர் பரத் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இதில் ஒரு குறும்பான பெண்ணாக நடித்த தமன்னாவிற்கு இது பெரிய புகழை பெற்றுத் தந்தது.
இப்படத்தின் மூலம் தமன்னாவிற்கு எக்கச்சக்க ரசிகர்கள் கிடைத்தனர். இந்த படத்திற்கு
பிறகு இவரின் மார்க்கெட் எகிறியது என்று சொல்லலாம். தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து பட்டையை கிளப்பி வந்தார்.
தற்போது ஓடிடி தளங்களில் வெப் சீரிஸில் நடித்து வந்தார் தமன்னா. அந்த படப்பிடிப்புகளுக்காக ஹைதராபாத் வந்தபோது அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் அவருக்கு சோதனை செய்தபோது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே அவரின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்துள்ளனர். இந்நிலையில் இவருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வெளியான தகவலால் தமன்னாவின் ரசிகர்கள் அனைவரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.