உலக கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.
PAK VS SA
T20 உலக கோப்பை தொடருக்கான சூப்பர் 12 ஆட்டங்கள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. அதன்படி இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தனர். இதையடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய ரிஸ்வான் மற்றும் பாபர் இருவரும் ஆட்டமிழந்து அதிர்ச்சிக் கொடுத்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தனர். இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி வீரர்கள் தொடக்கமே அதிரடி காட்டினர். ஆனால் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 14 ஓவராக குறைக்கப்பட்டது.
ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்று அசத்திய தமிழக வீரர்கள்…, உலக கோப்பைக்கு தகுதி!!
மழையின் தாக்கம் குறைந்த பிறகு தொடங்கிய ஆட்டத்தில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் 108 ரன்கள் மட்டுமே குவித்து தோல்வி அடைந்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.