இந்தியாவின் உள்ளூர் தொடர்களில் ஒன்றான சையத் முஷ்டாக் அலி நேற்று (அக்டோபர் 16) முதல் பல்வேறு மைதானங்களை மையமாக கொண்டு நடைபெற்று வருகிறது. 39 அணிகள் பங்கு பெற்றுள்ள இந்த தொடரில், இன்று பஞ்சாப் அணியானது ஆந்திரபிரதேச அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில் பஞ்சாப் அணியானது வரலாறு சாதனை ஒன்றையும் படைத்துள்ளது. அதாவது, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியானது 20 ஓவர் முடிவில் 275 ரன்கள் குவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
சையத் முஷ்டாக் அலி வரலாற்றில் 20 ஓவர் முடிவில் 275 ரன்கள் எடுப்பது என்பது இதுவே முதல் முறையாகும். இந்த போட்டியில், அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 112(51) & அன்மோல்பிரீத் சிங் 87(26) எடுத்திருந்தனர். இந்த கடின இலக்கை துரத்திய ஆந்திரப்பிரதேச அணியோ 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்து 105 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வி அடைந்தது.
உலக கோப்பை 2023: அரையிறுதிக்கு செல்ல இத்தனை போட்டிகள் ஜெயிச்சா போதுமா?? வெளியான முக்கிய தகவல்!!