பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் முக்கிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. மும்பை உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடன் சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா சக்ரவர்த்தியின் சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி சாமுவேல் மிரிண்டாவை போதைப்பொருள் தடுப்பு குழு காவலில் எடுத்து விசாரணை நடத்தவுள்ளது.
போதைப்பொருள் புழக்கம்:
2020ம் ஆண்டில் திரையுலகில் பல முக்கிய நட்சத்திரங்கள் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கொலை செய்யப்பட்டதாகவும் பலவாறு வதந்திகள் கிளம்பியது. இந்நிலையில் அவர் தூக்குக் கயிறு கழுத்தில் இறுக்கியதால் தான் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவரது மரணத்தில் மர்மம் நிலவுவதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
சுஷாந்த் தற்கொலை வழக்கில் முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மும்பை உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடன் ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரதுசகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி சாமுவேல் மிரிண்டாவை நான்கு நாட்கள் காவலில் போதைப்பொருள் தடுப்புக்குழு எடுத்துள்ளது. இதனால் பல திடுக்கிடும் உண்மைகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
ரியா சக்ரவர்த்தியின் சகோதரர் ஷோவிக் இந்த போதை மருந்துகளை வழங்கியதை என்சிபி (போதைப்பொருள் தடுப்புக்குழு) உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம், ஷோவிக் மற்றும் சாமுவேல் மிரிண்டா ஆகியோர் என்.சி.பி.யால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
பிக் பாஸ் 4 இல் இவங்களும் இருக்காங்களா?? – அப்போ பரபரப்புக்கு பஞ்சம் இல்லை!!!
அவருக்கு போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. சுஷாந்திற்கு ஷோவிக் ரியா சக்ரவர்த்தியின் வேண்டுகோளின் பேரில் போதை மருந்துகள் வழங்கியதை என்சிபி கண்டறிந்துள்ளது. இதனால் ரியா வீட்டிலும் சோதனைகளை நடத்தினார். இந்நிலையில் இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பப்போவதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.