தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் பிரபல நாயகியான ராசி கண்ணா தற்போது இரண்டிற்கு மேற்பட்ட தமிழ் படங்களை கைவசம் வைத்திருப்பதால் இந்த லாக்டவுனில் ஆர்வமாக தமிழை கற்று வருகிறார். இதனால் ரசிகர்கள் இடையே பாராட்டுகளை பெற்று வருகிறார்.
ராசி கண்ணா
தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய வெற்றிப்படங்களை தந்துள்ளார். மேலும் இவர் இந்தியா அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார். தற்போது தமிழில் சுந்தர் சி யின் அரண்மனை 3, சூர்யாவுடன் அருவா மற்றும் ஜீவாவுடன் மேதாவி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
லாக்டவுன் முடிந்ததும் இதன் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன. அடுத்தடுத்து தமிழ்ப்பட வாய்ப்புகள் வருவதால், நடிகை ராசி கண்ணா இந்த லாக்டவுன் சமயத்தில் தமிழ் பேச கற்று வருகிறார். ஆன்லைனில் இதற்காக பயிற்சி எடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார். இதன்முலம் மீண்டும் பள்ளிக்கு சென்ற உணர்வு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். நடிகை ராசி கண்ணாவின் இந்த முயற்சிக்கும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |