பெட்ரோல் & டீசலுக்கு கொரோனா வரி விதிப்பு – மாநில அரசின் முடிவால் மக்கள் அதிர்ச்சி..!

0

புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கும் கொரோனா வரி விதிக்கப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

கொரோனா வரி விதிப்பு:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மாநில அரசுகளுக்கு வரி வசூல் இன்றி பெருமளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த வருவாய் இழப்பை சரிசெய்ய மாநில அரசுகள் மதுக்கடைகளை திறந்து வியாபாரத்தை தொடங்கின. ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட அளவு மதுபானங்களின் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டு விலை அதிகரிக்கப்பட்டது.

புதுச்சேரியிலும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு சிறப்பு கொரோனா வரி விதிக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. இந்த புதிய வரியால் அங்கு மதுபானங்களின் விலை 200 சதவீதம் வரை அதிகரித்தது. இந்நிலையில் இந்த கொரோனா வரியை பெட்ரோல், டீசலுக்கும் புதுச்சேரி அரசு விதித்துள்ளது. அதன்படி பெட்ரோல் மீது 5.75 சதவீதமும், டீசலுக்கு 3.65 சதவீதமும் வரி உயர்த்தப்பட்டு உள்ளது. இது 3 மாதங்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அம்மாநில மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here