இந்திய கிரிக்கெட் அணி பங்களாதேஷ் அணியுடன் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் 2-0 என இந்திய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து 2023ல் நடைபெறவுள்ள டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற உள்ளது. இதையடுத்து ஜனவரி மாதம் இலங்கை அணி T20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்குபெற இந்தியாவுக்கு வரவுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால் சொந்த மண்ணில் இந்திய அணி இலங்கை அணியுடன் மோத உள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இந்த தொடர்கள் உள்ளது. இதையடுத்து மிடில் ஆர்டரில் 360 அதிரடி இந்திய வீரர் சூர்யகுமார் இடம் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஐபிஎல் போல TNPL லிலும் ஏலமா?? புது பொலிவுடன் அடுத்த சீசன்…, வெளியான தகவல்!!
அதாவது “2018ம் ஆண்டு IPL போட்டியில் கொல்கத்தா அணியில் இருந்து மும்பை அணிக்கு வந்ததில் இருந்து என்னை சகோதரனை போல ரோஹித் சர்மா நடத்தி வருகிறார். மேலும் சமீப காலமாக விராட் கோஹ்லியின் பார்ட்னர்ஷிப் சிறந்த முறையில் கைகோர்த்து வருகிறேன். இந்த சாதனை வீரர்களின் நட்பு, சகோதரத்துவதால் நான் மென்மேலும் வளர்ந்து வருகிறேன்” என சூர்யகுமார் யாதவ் பெருமிதத்துடன் பதிலளித்தார்.