பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் வெண்பா என்ற பரீனா ஆசாத். இவர் பல வருடங்களுக்கு மேலாக சினிமாத்துறையில் இருந்து வருகிறார். ஆனால் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக களமிறங்கிய பிறகு வெண்பாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிய ஆரம்பித்தனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் இந்த வருடத்தின் இறுதி நாட்களை எட்டிய நிலையில் பரினா தனது இன்ஸ்டா பக்கத்தில் கேள்வி பதில் Section னை தனது பாலோவர்ஸுக்கு வைத்துள்ளார். அதன் படி இவர் பற்றிய பலதரப்பட்ட சுவாரசியமான கேள்விகள் ரசிகர்களால் கேட்கப்பட்டது. அதற்கு பரினா ஜாலியாக பதில் அளித்துள்ளார்.
பத்து படம் நடிச்சா பத்ம ஸ்ரீ விருதா? தென்னிந்திய சினிமாவை கண்டுகொள்ளாத அரசு., நடிகை ஜெயசுதா ஆவேசம்!!
அதில் எப்பொழுது பாரதி கண்ணம்மா சீரியல் முடியும் என ஒருவர் பரீனாவிடம் கேட்டுள்ளார். அதற்கு பரீனா, ”அடிச்சு கேட்டாலும் சொல்ல கூடாதுன்னு சொல்லிருக்காங்க” என்று கூலாக பதில் அளித்துள்ளார். இவரின் நடிப்புக்கு தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.