பாலிவுட் திரையுலகில் மாடல் அழகியாக திகழ்ந்த கங்கனா ரனாத் இப்போது தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 2006ம் ஆண்டு ஹிந்தி படத்தில் அறிமுகமாகி 2008ல் “தாம் தூம்” படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் இவர் சிறந்த நடிகை, பிலிம்பேர் என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை கங்கனா ரனாத்துக்கு இந்திய அரசு வழங்கியது. இதைத்தொடர்ந்து 1970, 80 ஸ் களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஜெயசுதா, 10 படங்கள் நடிப்பதற்குள் கங்கனாவுக்கு தேசிய விருதா? என வன்மையாக கண்டித்துள்ளார்.
13 ஆண்டுகள் கழித்து கமலோட இணையும் சூப்பர் ஸ்டார்.., ஆஹா அப்ப தரமான சம்பவம் இருக்கு மக்களே!!
இதையடுத்து கங்கனா ரனாத் அற்புதமான நடிகை தான். ஆனால் சினிமா உலகில் பல வருடங்களாக உரிய அங்கீகாரம் வழங்கப்படாமல் எத்தனையோ நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளனர். கின்னஸ் சாதனை படைத்த விஜய நிர்மலா போன்றவர்கள் தென்னிந்திய சினிமாவில் உள்ளதை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வருந்தத்தக்க செயலாக உள்ளது என நடிகை ஜெயசுதா கூறியுள்ளார்.