சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ள நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.
சூர்யா 42:
கோலிவுட்டில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறப்பவர் தான் நடிகர் சூர்யா. இவர் தற்போது பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் சில நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில், அதற்குள் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘சூர்யா 42’ படத்தில் நடிக்க தயாராகியுள்ளார். மேலும் UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் படத்தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கவுள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனை தொடர்ந்து சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு பூஜை அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அப்போது ஸ்டுடியோ கிரீன் படத்தயாரிப்பு நிறுவனம் சார்பாக கோரிக்கை விடப்பட்டது. அதாவது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தயவு செய்து யாரும் இணையத்தில் பகிர வேண்டாம்.
படமே ரிலீஸ் ஆகல.., அதுக்குள்ள பல கோடியை அள்ளிய துணிவு.., கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!!
நாங்கள் கஷ்டப்பட்டு வேர்வை சிந்தி படக்குழு உழைத்து வருகிறது. இப்படத்தை தியேட்டர் அனுபவமாக சமர்ப்பிக்க விரும்பிகிறோம் என்று கூறியுள்ளார். தற்போது உருவாகி வரும் வாரிசு, ஜெயிலர் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் சமீபத்தில் கசிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.