தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அரசின் நலத்திட்டம் முறையாக சென்று சேர்கிறதா? என்பதை கண்காணிக்க, அதிரடி மாற்றம் ஒன்றை மாநில கல்வித்துறை செய்துள்ளது.
கல்வித்துறை அதிரடி :
தமிழக பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்வதற்காகவும், அரசின் நலத்திட்டங்கள் உரிய முறையில் சென்றடைகிறதா? என்பதை சோதனை செய்வதற்காகவும் அரசு ஒரு ஏற்பாடு செய்துள்ளது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
அதாவது மாவட்ட கல்வி அலுவலகங்களை இடைநிலை கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளி என மூன்று வகைகளாக பிரித்து 32 மாவட்ட கல்வி அலுவலக பணியிடங்கள், புதிதாக உருவாக்கியுள்ளது. மேலும், 16 மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மற்றும் 86 பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் ஆகிய பணியிடங்களை உடனடியாக நிரப்புமாறு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் அதிரடியாக நிறுத்தப்பட்ட பெட்ரோல், டீசல் விற்பனை – அரசு உத்தரவு! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!
உடனடியாக இந்த பணி நியமனங்களை முடித்து, இது குறித்த ஆய்வறிக்கையை உடனே கல்வித்துறைக்கு அனுப்பிட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிர்வாக மேம்பாட்டிற்காக, பள்ளிக் கல்வித் துறை எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு கல்வியாளர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.