தமிழகத்தில் அதிரடியாக நிறுத்தப்பட்ட பெட்ரோல், டீசல் விற்பனை – அரசு உத்தரவு! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

0
தமிழகத்தில் அதிரடியாக நிறுத்தப்பட்ட பெட்ரோல், டீசல் விற்பனை - அரசு உத்தரவு! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

தமிழகத்தில் இதுவரை கேன்கள், பாட்டில்களில் வழங்கப்பட்டு வந்த பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விற்பனை அதிரடியாக நிறுத்தப்படுவதாக, மாநில பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.

வாகன ஓட்டிகள் சிரமம்:

தமிழகத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்களிலும் வாகன ஓட்டிகளின் தேவையைப் பொறுத்து, கேட்பவர்களுக்கு பாட்டில் மற்றும் கேன்களில் எரி பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது இந்த விற்பனை அதிரடியாக நிறுத்தப்படுவதாக தமிழக பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மாநிலம் முழுவதும் கடந்த இரு தினங்களாக, பாஜக பிரமுகர்களின் வீடு, கடை மற்றும் தலைமை அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் அரங்கேறி வருவதால், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழக காவல்துறை அறிவுறுத்தலின்படி, இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

சிலிண்டர் மானியத்தை Check பண்ணிருக்கீங்களா? இது இவ்ளோ ஈஸியா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!!

இனிமேல் வாகனங்களில் மட்டுமே எரிபொருள் நிரப்பப்படும் என்றும், உதிரியாகவோ, சில்லறையாகவோ எரிபொருட்கள் தனியே வழங்கப்பட மாட்டாது என, தமிழகத்தில் உள்ள அனைத்து பல்க்களிலும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here