விஜய் டிவிக்கு போட்டியாக சன் டிவியில் ஏகப்பட்ட சீரியல்கள் TRB யில் முதலிடம் பிடிப்பதற்காக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதிலும் எதிர்நீச்சல், கயல், சுந்தரி சீரியல் தான் TRB யை ஹை பீக்கில் கொண்டு செல்கிறது என்றே சொல்லலாம். இப்படி இருக்கையில் இதில் சுந்தரி சீரியல் விரைவில் முடிவடைய போவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இத்தனை நாள் கார்த்திக் சுந்தரியை ஏமாற்றிய விஷயம் முருகன், பாட்டிக்கும் தான் தெரியாமல் இருந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!
ஆனால் இப்போது கார்த்திக் பித்தலாட்டம் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இன்னும் அனு மட்டும் தான் பாக்கி. அவருக்கும் கூடிய விரைவில் தெரிந்து விட்டால் கிளைமாக்ஸ் முடிவுக்கு வந்துவிடும். இதனால் சீரியல் விரைவில் முடிய இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சீரியலுக்கு பதில் மற்றொரு அதிரடி சீரியல் களமிறங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.