“ரோஜா சீரியலில்” குவா.,குவா., அரங்கேறும் எதிர்பாராத சம்பவங்கள்.,,முடிவுக்கு வரும் சீரியல்!!

0
"ரோஜா சீரியலில்" குவா.,குவா., அரங்கேறும் எதிர்பாராத சம்பவங்கள்.,,முடிவுக்கு வரும் சீரியல்!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில், விறுவிறுப்பை கூட்டும் வண்ணம் பல எதிர்பாராத சம்பவங்கள் அரங்கேற உள்ளது.

ரோஜா சீரியல்:

சன் டிவியில் கடந்த 4 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் “ரோஜா சீரியல்”, தற்போது வரை ரசிகர்களை கவர்ந்த வண்ணம் டிஆர்பியை முன்னணியில் இருந்து வருகிறது. இந்த சீரியலின் கதைக்களம் பல விதமாக சென்றாலும், கதையின் விறுவிறுப்பு, அர்ஜுன்- ரோஜா ரொமான்ஸ், அனுவின் வில்லத்தனம் ஆகியவற்றில் எந்த குறையும் இல்லாமல் சீரியல் பரபரப்பாக நகர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய எபிசோடில், ரோஜா புள்ளத்தாச்சி அம்மன் கோவிலுக்கு போக வேண்டும், வேண்டுதல் இருக்கிறது என வீட்டில் சொல்ல அனைவரும் போக வேண்டாம் நீ நிறைமாத கர்ப்பிணி என்று தடுக்கின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் ரோஜா, அமுத நாயகி அம்மாவிடம் வாக்கு கேட்டு பாப்போம் அவர் ஓகே சொல்லிவிட்டால் நான் போறேன் இல்லை என்றால், நான் கோவிலுக்கு போகவில்லை என்று குடும்பத்தினரிடம் சொல்ல அவர்களும் ஒத்துக்கொண்டனர். அடுத்து அமுத நாயகி அம்மாவும், ரோஜாவிடம் புள்ளத்தாச்சி அம்மன் கோவிலுக்கு போய் உன் வேண்டுதலை செய்து விட்டு வா என்று சொல்லிவிட்டார். இதையடுத்து புள்ளத்தாச்சி அம்மன் கோவிலுக்கு ரோஜா, அர்ஜுன் செல்ல உள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு, அனு, யசோ குரூப்கள் ரோஜாவை பழி வாங்க கட்டாயம் ஒரு பிளான் போடுவார்கள்.

தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் களமிறங்கிய கன்னட பிரபலம்.., அப்ப மாஸ் சீனுக்கு பஞ்சம் இருக்காது!!

இதையடுத்து இன்றைய ப்ரோமோவில் ரோஜா-அர்ஜுன் சென்ற கார் மீது வேன் மோதி ரோஜா கீழே விழுந்து விட்டார். இதனால் ரோஜாவுக்கு ஒரு ஆபத்து ஏற்பட்டு, பிரசவ வலி வந்துவிடும், அந்த சமயத்தில் புள்ளத்தாச்சி அம்மன் அவரை காப்பாற்றி விடுவார். இதையடுத்து ரோஜாவுக்கு நல்ல படியாக குழந்தை பிறந்துவிடும் என்ற நோக்கில் கதை இனி நகரும் என்று ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். ரோஜாவுக்கு குழந்தை பிறந்ததை அடுத்து சீரியல் முடிவுக்கு வரவும் வாய்ப்பு இருக்கிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பதை வரும் எபிசோடில் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here