டி20 உலக கோப்பை இந்திய அணி வெல்ல தவறியதை அடுத்து, வெற்றி கேப்டனான தோனியை பிசிசிஐ, அணியில் இணைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.
தோனி:
இந்திய அணி சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பையை, வெல்ல தவறியதால், அணியில் பல மாற்றங்கள் செய்ய வேண்டும் என பிசிசிஐ தீவிரமாக இறங்கி உள்ளது. தோனி தலைமைக்கு பிறகு இந்திய அணியானது ஒரு உலக கோப்பையும் வெல்லத்ததால், ரசிகர்கள் இவரை அதிக மிஸ் செய்து வருவதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால், பிசிசிஐயானது தோனியை இந்திய அணியுடன் மீண்டும் இணைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதாவது, ஒரு வீரராக இல்லாமல், அணியை நிர்வாகிக்கு இயக்குனராக பதவி வழங்க இருப்பதாக தகவல் பரவி வருகின்றன. ஆனால், இயக்குனராக பதிவு வகிக்க வேண்டுமானால், அனைத்து வடிவ தொடர்களில் இருந்தும் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
இந்திய அணிக்கு எதிரான நியூசிலாந்து படை…, கேன் வில்லியம்சனை கேப்டனா?? முழு விவரம் உள்ளே!!
இதையடுத்து, அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் சீசனுடன் தோனி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஓய்வு பெறுவது உறுதியானால், பிசிசிஐயானது இவரை இந்திய அணியின் இயக்குநராக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள கூடும் என எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன. இதன் மூலம், தோனி அணிக்கு திரும்பும் பட்சத்தில், பல மாற்றங்களை செய்து எதிர்வரும் ஒரு நாள் உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.