தமிழகத்தில் வட பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்றுடன் வெப்பம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் வரும் மே 29ம் தேதியுடன் கத்திரி வெயில் முடிவடைய உள்ளது. அம்பன் புயல் கரையைக் கடந்து விட்ட நிலையில் அதனுடன் தமிழகத்தின் ஈரப்பதத்தையும் கூடவே எடுத்துச் சென்று விட்டது. இதனால் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் வெப்பச்சலனம் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் ஒரு சில பகுதிகள் மற்றும் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் எனவும் இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக யாரும் காலை 11 மணிமுதல் மதியம் 3.30 மணிவரை வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் வெயிலினால் உடலில் நீர் வற்றாமல் இருக்க பழ வகைகள் மற்றும் நீர்சத்து நிறைந்த காய்கறிகளை உட்கொள்ளலாம்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |