சூரியனின் கதிர் வீச்சில் இருந்து நம்மை பாதுகாக்கும் பூமியின் காந்தப்புலம் வலுவிலந்து உள்ளதாக செயற்கைக்கோள் அனுப்பிய தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
பூமியின் காந்தப்புலம்:
பூமியைச் சுற்றியுள்ள காந்தப்புலம் கடந்த 2 நூற்றாண்டுகளில் மட்டும் சராசரியாக அதன் பலத்தில் 10 சதவீதத்தை இழந்துள்ளதாக தற்போதைய ஆய்வுகள் அடிப்படையில் கண்டறியப்பட்டு உள்ளது. காந்தப்புலம் சூரிய ஒளியின் கதிர் வீச்சில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இது பலவீனமடைவதால் பூமியைச் சுற்றி வலம் வரும் செயற்கைகோள்கள் மற்றும் விண்கலன்களுக்கு இது தொழில்நுட்ப சிக்கல்களை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஆப்பிரிக்காவிற்கும் தென் அமெரிக்காவிற்கும் இடையில் நீளமான ஒழுங்கில்லாத தெற்கு அட்லாண்டிக் பகுதியில் விரைவான சுருக்கம் காணப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இதுவே பெரிய மற்றும் விரைவான சுருக்கம் ஆகும். இப்பகுதி வளர்ந்து மேற்கு நோக்கி வளர்ந்து வருவதாக ஸ்வர்யம் செயற்கைகோள் அனுப்பிய தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |