பாகிஸ்தானில் கராச்சி பகுதியில் பயணியர் விமானம் ஒன்று வீடுகளின் மோது மோதி விழுந்து நொறுங்கிய கோர விபத்தில் பலர் பலியாகி இருக்கலாம் என செய்திகள் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில் விபத்து:
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸிற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று லாகூரில் இருந்து புறப்பட்டு கராச்சி விமான நிலையம் அருகே தரையிறங்கும் பொழுது கட்டுப்பாட்டை இழந்த காரணத்தால் அங்கிருந்த வீடுகளில் மோதி விழுந்து நொறுங்கியது. விழுந்த வேகத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. வீடுகளின் மீது விழுந்த காரணத்தால் பாதிப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
பயணிகள், விமான பணிப்பெண்கள் மற்றும் பைலட்டுகள் என 107 பேர் பயணம் செய்த அந்த விமானம் வீடுகளின் மீது விழுந்து நொறுங்கி உள்ளது. இதனால் விமானம் மட்டுமின்றி வீடுகளில் இருந்த பலரும் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழப்புகள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு மீட்புப்பணிக்காக தீயணைப்புத் துறையினர், ராணுவத்தினர் சென்று பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |