‘கல்விகடனை கண்டிப்பாக ரத்தாக்குவேன்’ – திருவண்ணாமலையில் ஸ்டாலின் வாக்குறுதி!!

0

தற்போது தமிழகத்தில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு எதிர்க்கட்சி ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். திருவண்ணாமலையில் பிரச்சாரத்தின் போது இந்த முறை கண்டிப்பாக கல்விக்கடனை ரத்தாக்குவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

ஸ்டாலின்:

தற்போது தமிழகத்தில் சட்டப்பேரவை காலம் வரும் மே மாதத்துடன் முடிவுக்கு வரவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழக்கத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தேர்தலுக்காக தேர்தல் அதிகாரிகள் மும்மரமாக வேலைகளை செய்து வருகின்றனர். மேலும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் குறித்த பிரச்சார வேலைகள் மற்றும் கூட்டணி வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் இன்று ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் தனது பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூரில் உள்ள மக்களிடம் பிரச்னைகளை ஸ்டாலின் கேட்டு வருகிறார். அதன்பிறகு பேசிய ஸ்டாலின் கூறியதாவது, கடந்த முறை ஆட்சிக்குவர முடியவில்லை. அதனால் தான் கல்விக்கடனை ரத்து செய்ய முடியவில்லை. இந்த முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு கட்டாயமாக கல்விக்கடனை ரத்து செய்வேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

மதுபானம் மீதான கொரோனா வரி மேலும் 2 மாதங்களுக்கு நீடிப்பு – காவல் ஆணையர் தகவல்!!

மேலும் தற்போதைய காலத்தில் அதிமுகவினர் தான் கூட்டுறவில் லட்சக்கணக்கான மதிப்பில் ரூபாயை கடன் வாங்கியுள்ளனர். ஆனால் வேறு கட்சி என்று வேறுபாடு பாக்காமல் பொதுவாக தமிழக மக்கள் என்று கருதி சுமார் ரூ.7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவு கடனை மறைந்த முன்னாள் முதலைமச்சர் கருணாநிதி ரத்து செய்தார் என்பதை பதிவுசெய்தார். ஸ்டாலினிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிப்பதற்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிந்துள்ளனர். மேலும் அந்த புகார்கள் அனைத்தையும் ஸ்டாலின் ஓர் பெட்டியில் போட்டு சேகரித்து வைத்துள்ளாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here