மதுபானம் மீதான கொரோனா வரி மேலும் 2 மாதங்களுக்கு நீடிப்பு – காவல் ஆணையர் தகவல்!!

0

புதுசேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் கொரோனா காலத்தில் மதுபானம் மற்றும் சாராயத்திற்கு கொரோனா வரி விதிக்கப்பட்டது. இந்த கொரோனா வரி மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளார் என்று காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

கொரோனா:

கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதி வாரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. மேலும் கடந்த சில மாதங்களாகவே கொரோனாவின் தாக்கம் நாட்டில் குறைந்து வந்தது. இதனை தொடர்ந்து மாநில அரசு அந்தந்த மாநிலத்திற்கு சில தளர்வுகளை அளித்தது. இதன் படி கடந்த ஆண்டு மே மாதத்தில் 25ம் தேதி முதல் புதுசேரி, காரைக்கால் பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க உத்தரவிடப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அங்கு எப்போதும் மாதுபானத்தின் விலை மற்ற மாநிலத்தை ஒப்பிடும் போது கம்மியாக இருக்கும். ஆனால் இந்த கொரோனா காலத்தில் அந்த மாநிலம் ஓர் முடிவை எடுத்தது. அது என்னவென்றால் மதுபானம் மற்றும் சாராயம் மீது கொரோனா வரியை விதித்தது. இதனால் புதுசேரி, காரைக்கால் பகுதிகளில் தமிழ்நாடு போலவே மதுபானத்தின் விலை அதிகரித்தது. மதுபானம் மீது 25 சதவீதமும் மற்றும் சாராயம் மீது 20 சதவீதமும் கொரோனா வரியை விதித்தனர்.

‘தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் குறைந்தாலும் பரிசோதனை குறைக்கப்படவில்லை’ – முதல்வர் பேட்டி!!

மதுபானம் மீது விதித்த இந்த கொரோனா வரி சட்டம் அமலுக்கு வந்து பல மாதங்கள் ஆகின. தற்போது இது குறித்த ஓர் தகவல் வெளியாகியுள்ளது. மதுபானம் மீதான விதிக்கப்பட்ட கொரோனா வரியை மேலும் 2 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாம். இதனை ஆளுநர் முடிவெடுத்துள்ளார். இந்த தகவலை காவல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here